42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
217 பயணிகளுடன் லண்டன் சென்ற விமானம், நடுவானில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு-விசாரனையில் வெளியான அதிர்ச்சி!
![airoplane-fire-america](https://cdn.tamilspark.com/large/large_maxresdefault-19934.jpg)
வர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், 217 பயணிகளுடன் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்திலிருந்து பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணித்துள்ளது.
நடுவானில் பயணித்துக்கொண்டிருந்த போது, விமானத்தில் தீ பிடித்துள்ளது, விமானக் குழுவினர் விமானத்தை பாஸ்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார்.
இதனையடுத்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரனை நடத்தியபோது தொலைபேசி சார்ஜரால் பயணிகள் இருக்கையில் தீ பிடித்து பரவியதாக தெரியவந்துள்ளது. எனினும், விபத்து குறித்து மாசசூசெட்ஸ் மாகாண போலீஸ் தொடர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.