திடீரென இடிந்து விழுந்த சுரங்கம்., 31 பேர் பலி! மீட்பு பணி தீவிரம்!!

திடீரென இடிந்து விழுந்த சுரங்கம்., 31 பேர் பலி! மீட்பு பணி தீவிரம்!!



 A mine suddenly collapsed in Myanmar

மியான்மரில் உள்ள கச்சின் மாகாணத்தில் அமைந்திருக்கும் சுரங்கத்தில் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த நேரத்தில் சுரங்கம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து உள்ளது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளார். மேலும் எட்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மீட்பு படையினர். இதனை தொடர்ந்து சுரங்கம் இடிந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.

மேலும் மீட்பு பணியின் போது பலத்த மழை பெய்து வருவதால் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றால் தான் பணியை தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.