இனி அந்த கவலையே வேண்டாம்! வாட்ஸ்-ஆப்பில் வந்துவிட்டது புதிய வசதி

இனி அந்த கவலையே வேண்டாம்! வாட்ஸ்-ஆப்பில் வந்துவிட்டது புதிய வசதி



Whatsapp frequently forwarded label

வாட்ஸ்-ஆப் செயலியில் பல போலியான தகவல்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பகிரப்படுவதை கண்டறிய வாட்ஸ்-ஆப் நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

கடந்த வருடத்தில் ஒரே நேரத்தில் ஒரு மெசேஜை பலருக்கும் அனுப்ப தடைவிதித்து 5 பேருக்கு மட்டுமே அனுப்பும் வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மேலும் மற்றவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு மெசேஜை பிறருக்கும் அப்படியே அனுப்பினால் 'Forwarded' என்ற வார்த்தை சேர்த்து அனுப்பப்பட்டது. 

Whatsapp

தற்போது 5 முறைக்கு மேல் ஒரே மெசேஜ் பகிரப்பட்டால் அதனை அடையாளம் காண புதிய எழுத்து ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்ற மெசேஜுடன் 'Frequently Forwarded' என்ற வாக்கியம் அனுப்படுகிறது. 

இந்த வசதியானது ஆண்ட்ராய்டு மற்றும் Ios வாட்ஸ்-ஆப் பீட்டா பயனாளர்களுக்கு கடந்த மார்ச் மாதமே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த வசதியானது அனைத்து பயனாளர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.