அடக்கடவுளே.. யூடியூபர் இர்பானின் கார் மோதி பெண் பரிதாப பலி.! போலீசார் தீவிர விசாரணை.! நடந்தது என்ன??

அடக்கடவுளே.. யூடியூபர் இர்பானின் கார் மோதி பெண் பரிதாப பலி.! போலீசார் தீவிர விசாரணை.! நடந்தது என்ன??



youtuber-irfan-car-accident-one-lady-dead

தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு இணையாக யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு பிரபலமானவர்கள் ஏராளம். அவ்வாறு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்தான் யூடியூபர் இர்பான். உணவு விமர்சகரான இவர் கையேந்தி பவன் முதல் பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் வரை சென்று அங்குள்ள உணவுகளை சாப்பிட்டு அதன் தரம் மற்றும் சுவை குறித்து ரிவியூக்களை வெளியிடுவார்.

இர்பான் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உணவு ரிவியூக்களை வெளியிட்டு பிரபலமாகியுள்ளார். சமீபத்தில்தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் தற்போது இர்ஃபானின் கார் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

YouTuber

இர்பானின் கார் செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தபோது மறைமலர் நகர் பகுதியில் 55 வயதுமிக்க மூதாட்டி ஒருவர் மீது மோதியுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையில் உயிரிழந்தவர் பொத்தேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பத்மா என்பவர், அவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இர்ஃபானின் காரை ஓட்டுநர் அசாருதீன் என்பவர்தான் ஓட்டி வந்ததாகவும், அவர்தான் விபத்து ஏற்படுத்தியுள்ளார் எனவும் போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.