பைக்கில் வந்த கணவனை தாக்கி, மனைவியை தூக்கிச்சென்று பாலியல் கொடுமை செய்த சிறுவர்கள்!.

பைக்கில் வந்த கணவனை தாக்கி, மனைவியை தூக்கிச்சென்று பாலியல் கொடுமை செய்த சிறுவர்கள்!.



youngster attacked husband and sexual torture to his wife

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் தனது மனைவியுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு,  இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்ப வந்துகொண்டிருந்தார்,

அப்போது, கோங்கல் பகுதியின் அருகே(அடர்ந்த வனப்பகுதி) முரளியின் இருசக்கர வாகனம் வருகின்றபோது 4பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்துள்ளனர். பின்னர், முரளியை தாக்கிவிட்டு அவரது மனைவியை தூக்கிச் சென்று அந்த மர்ம கும்பல் பாலியல் கொடுமை செய்துள்ளனர்.

மர்மகும்பலால் தாக்கப்பட்ட முரளி அருகில் இருந்த கிராம மக்களை உதவி கேட்டு அழைத்துவந்துள்ளார். அதை அறிந்த அந்த கும்பல் தப்பியோடினர். இதனையடுத்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது 

அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர்.   அப்போது கோங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இந்த சம்பவத்தில் 18 வயதுக்கு குறைவான இரண்டு சிறுவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, 4 பேரையும் கைது செய்த பொலிசார் அவர்களின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதில் மோகன், முனியசாமி இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர், சிறுவர்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.