இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியிடம் வேலையை காட்டிய இளைஞர்... போக்சோவில் கம்பி எண்ண வைத்த பெற்றோர்.!

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியிடம் வேலையை காட்டிய இளைஞர்... போக்சோவில் கம்பி எண்ண வைத்த பெற்றோர்.!



young-man-who-black-mailed-a-17-year-old-girl-booked-un

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த  சதீஷ்குமார் என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமி அந்த இளைஞருடன் தனது புகைப்படங்களையும் ஷேர் செய்திருக்கிறார்.

tamilnaduமேலும் கடந்த மே மாதம் உளுந்தூர்பேட்டை வந்த சிறுமி அந்த இளைஞருடன் தங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் வந்து சிறுமியை மீட்டு சென்று இருக்கின்றனர். இந்நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு போன் செய்த இளைஞர்  தான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால்  சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டி இருக்கிறார் .

tamilnaduஇதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்  இந்த சம்பவம் தொடர்பாக பெரியகுளம் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறை உளுந்தூர்பேட்டை சென்று சதீஷ்குமாரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.