விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம்! வாலிபர் எடுத்த விபரீத முடிவு! இறுதியில் நேர்ந்த சோகம்!

விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம்! வாலிபர் எடுத்த விபரீத முடிவு! இறுதியில் நேர்ந்த சோகம்!


young-man-suicide-for-forced-marriage

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ். 34 வயது நிரம்பிய இவர், அம்பத்தூர், பாடியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார். அவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்தனர். 

இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். தற்போது வேறொரு பெண்ணுடன் பிரித்திவிராஜ் திருமணம் செய்ய இருந்தார். இந்தநிலையில் முதல் மனைவி சத்யாவின் இரண்டு சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் பிரித்திவிராஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரம் தூக்கிச்சென்று அங்குள்ள ஒரு வீட்டில் தங்க வைத்து, தனது தங்கையை மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என அவரை அடித்து வற்புறுத்தியுள்ளார்.

suicide
 
ஒருகட்டத்தில்,  விவாகரத்து பெற்ற முதல் மனைவி சத்யாவுடன் அவருக்கு மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்தனர் சத்யாவின் இரண்டு சகோதரர்கள் மற்றும் உறவினர்கள். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த பிரித்திவிராஜ் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை பிரித்திவிராஜ் தனது வீட்டின் வாசலில் நின்றபடி திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ உடல் முழுவதும் பரவி வலியால் அலறல் சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து போலீசார் பிரித்திவிராஜிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பிரித்திவிராஜ் பரிதாபமாக இறந்தார். விசாரணையில், விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்ததாக அவரது மரண வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து தற்கொலைக்கு காரணமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.