கிறிஸ்தவ சபைக்கு வந்த பெண் கொடுத்த பாலியல் புகார்.! தலைமறைவான பாஸ்டர்கள்.!

கிறிஸ்தவ சபைக்கு வந்த பெண் கொடுத்த பாலியல் புகார்.! தலைமறைவான பாஸ்டர்கள்.!



young girl complaint on church faster

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள சீயோன்புரத்தைச் சேர்ந்தவர் பாஸ்டர் டேவிட் ராஜ். இவரது மகன் அனீஸ் பவுல் என்பவரும் பாஸ்டராக உள்ளார். இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கிறிஸ்தவ சபைக்கு வந்துள்ளார். இதனையடுத்து அனீஸ் பவுலுக்கும் அந்த இளம்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து அனீஸ் பவுல் அப்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உன்னை நான் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அப்பெண்ணுடன் அனீஸ் பவுல் பாலியல் தொடர்பு கொண்டுள்ளார்.

இதனையடுத்து அப்பெண்ணை திருமணம் செய்ய அனீஸ் பவுல் மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் பாஸ்டர்கள் டேவிட்ராஜ், அனீஸ் பவுல் மற்றும் உறவினர் ஒருவர் உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனர்.