டீ வாங்குவதற்காக டீ கடைக்கு சென்ற சிறுமியை மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம்.! அதிர்ச்சி காரணம்.!

டீ வாங்குவதற்காக டீ கடைக்கு சென்ற சிறுமியை மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம்.! அதிர்ச்சி காரணம்.!



young-girl-attacked-in-keeramangalam

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்து உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 10 ஆம் தேதி டீ வாங்குவதற்காக பக்கத்தில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்போது கடைக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதி சிறுமியை மரம் ஒன்றில் கட்டி வைத்து அடித்துள்ளனர். 

ஆனால் அருகில் இருந்த மக்கள் யாரும் தடுக்காமல் இருந்துள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பசியின் கொடுமையின் காரணமாக செல்போன்களை திருடியது தெரிய வந்தது.

திருடிய செல்போன்களை கடையில் விற்று பரோட்டா வாங்கி சாப்பிட்டு வந்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் வீட்டில் இருந்த ஒரு செல்போனை போலீசார் மீட்டனர்.  சிறுமியின் தாய் மற்றும் தந்தை கூலி வேலை செய்து வருவதும் அவரது தந்தை மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் செல்போன் திருடியதாக 12 வயது சிறுமியை மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.