திருமணம் முடிந்த 3 மாதத்தில் இளம் ஜோடிக்கு நடந்த பரிதாபம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

திருமணம் முடிந்த 3 மாதத்தில் இளம் ஜோடிக்கு நடந்த பரிதாபம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.



Young couples dead in road accident at erode

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ். 28 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயதான மஞ்சுளா என்ற பெண்ணிற்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. மஞ்சுளா ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வர அவரது கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி மற்றும் அவர்களது உறவுக்கார பெண் செம்பருத்தி என மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென எதுக்கே வந்த வேன் ஓன்று இவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளில் வேகமாக மோதியுள்ளது.

accident

இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூன்று பேரும் தூக்கி வீசப்படத்தில் பிரகாஷ் மற்றும் மஞ்சுளா இருவரும் சம்பவ இடத்திலையே பரிதமாக உயிரிழந்தனர். அவர்களது உறவினர் செம்பருத்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் இளம் தம்பதியினர் சாலை விபத்தில் உயிரிழந்தது அந்த பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.