மகனை வீட்டில் விட்டுவிட்டு கடைக்குச் சென்ற பெற்றோர்.! புடவையில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.!

மகனை வீட்டில் விட்டுவிட்டு கடைக்குச் சென்ற பெற்றோர்.! புடவையில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.!


young-boy-died


சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி. ஆட்டோ ஓட்டுநரான ரகுபதி தனது மனைவி மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை ரகுபதி தன் மனைவியுடன் கடைக்கு சென்றுள்ளார். 6 ஆம் வகுப்பு படிக்கும் அவர்களின் மகன் பாலாஜி வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

ரகுபதியின் வீட்டின் கதவு திறந்து இருப்பதைப் பார்த்து பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் உள்ளே  சென்று பார்த்துள்ளார். அப்போது சிறுவன் பாலாஜி, தொட்டில் கட்டியிருந்த புடவை கழுத்தை இறுக்கி, மயங்கிய நிலையில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் பக்கத்துக்கு வீட்டார்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலாஜி ஏற்கனவே  இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

young boy died

இதனையடுத்து செல்போன் மூலம்  சிறுவனின் பெற்றோருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து பாலாஜியின் பெற்றோர் கதறி அழுதப்படி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் இறந்த பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.