திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமணப்பெண் விபரீத முடிவு.. குடும்பத்தினர் கண்ணீர் சோகம்..!

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமணப்பெண் விபரீத முடிவு.. குடும்பத்தினர் கண்ணீர் சோகம்..!


women-suicide-after-her-marriage

திருமணமாகி ஒன்றரை மாதங்களே ஆன நிலையில், புதுப்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பஜார் தெருவில் வசித்து வருபவர்கள் நாகராஜ்-பூங்கொடி. இவர்களது மகள் மகேஸ்வரி (வயது 25). இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்லாவி பகுதியில் வசித்து வந்த அரசகுமார் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், பாலக்கோட்டில் உள்ள தாய் வீட்டிற்கு மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் வந்துள்ளனர். தொடர்ந்து மகேஸ்வரியின் கணவர் வேலை தொடர்பாக சென்னை சென்று காலை வீட்டிற்கு வந்த நிலையில், மகேஸ்வரியின் அறையை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அச்சமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

suicide

அப்போது மகேஸ்வரி அந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்ட குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாலக்கோடு காவல்துறையினர் மகேஸ்வரியின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருமணமாகி ஒன்றரை மாதங்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், தர்மபுரி கோட்டாட்சியர் சித்ரா விஜயன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். திடீரென புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.