பெண்களே உஷார்.. உயிரை பறித்த புடவை.. அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்!

பெண்களே உஷார்.. உயிரை பறித்த புடவை.. அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்!



Women death for saree struck in bus

திருப்பத்தூர் அருகே பைக்கில் சென்ற புடவை பேருந்தில் சிக்கியதில் அவர் இழுத்து செல்லப்பட்டு உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவரது மனைவி கடற்கரை தங்கம். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு உள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

thirupathur

அப்போது அரசு பேருந்து ஒன்று இவர்களை கடந்து சென்றபோது கடற்கரை தங்கத்தின் புடவை காற்றில் பறந்து பிரிந்தில் சிக்கிக் கொண்டது. இதில் அவர் 20 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.