சென்னை புழல் சிறையில் 50 வயது பெண்கைதி தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன?

சென்னை புழல் சிறையில் 50 வயது பெண்கைதி தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன?



Women accused hanged in puzhal jail

சென்னை புழல் சிறையில் 50 வயதான பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி என்ற காந்திமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வேலை செய்த வீட்டின் உரிமையாளரை கட்டிப்போட்டு விட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.

Puzhal Jail

அதன் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் காந்திமதி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Puzhal Jail

இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமின் கிடைத்தும் காந்திமதிக்கு உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் எழுதி தர முன் வராததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காந்திமதி யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.