பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லீக் நரம்பியல் நோயால் காலமானார்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மகள் செய்த காரியத்தால் விபரீதம்: சாப்பாட்டில் விஷம் கலந்து கணவருக்கு கொடுத்துவிட்டு பெண் தற்கொலை..!
மகள் செய்த காரியத்தால் விபரீதம்: சாப்பாட்டில் விஷம் கலந்து கணவருக்கு கொடுத்துவிட்டு பெண் தற்கொலை..!
சேலம் மாவட்டம், பொன்னம்மாபேட்டை மல்லி செட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (47). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுஜாதா (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் (16) உள்ளனர். மகள் சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இவர் அடிக்கடி செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்து உள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் செல்ஃபோனில் பேசுவதை நிறுத்தவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினமும் தனது மகள் யாருடனோ செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த தாய் சுஜாதா கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடிய போது அவரை காணவில்லை. இது குறித்து பெற்றோர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காணாமல் போன மாணவியை தேடி வந்தனர்.
இதற்கிடையே, மகள் காணாமல் போனதால் மன உளைச்சல் அடைந்த சுஜாதா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதனையடுத்து வீட்டில் வைத்திருந்த விஷ மருந்தை குடித்த சுஜாதா, மீதி விஷத்தை சாப்பாட்டில் கலந்து கணவர் செந்திலுக்கு கொடுத்துள்ளார். அதை உட்கொண்ட செந்தில், மற்றும் சுஜாதா இருவரும் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினர்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தோர், அங்கு வந்து மயங்கி கிடந்த கணவன்-மனைவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிசிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுஜாதா பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடும் செந்திலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.