பிரிந்து வாழ்ந்துவந்த கணவன்- மனைவி! 2வது திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி! பரபரப்பு சம்பவம்!

பிரிந்து வாழ்ந்துவந்த கணவன்- மனைவி! 2வது திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி! பரபரப்பு சம்பவம்!



wife-stop-husband-second-marriage

வேலூர் மேட்டு இடையம்பட்டி ரோடு எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் ராமச்சந்திரன். இவர் தொரப்பாடி பகுதியில்  டெய்லர் கடை ஒன்று வைத்துள்ளார். இவரது மனைவி கமலி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ராமசந்திரன், கமலி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கரூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன்  ராமச்சந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திரன் அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து,  இன்று காலை அடுக்கம்பாறை அருகே அம்மன் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

marriageமேலும் திருமணத்திற்கான சடங்குகள் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தகவலறிந்த கமலி அவரது மகன்களுடன் கோவிலுக்கு சென்று,  அங்கு இருந்தவர்களிடம் அனைத்தையும் எடுத்துகூறி திருமணத்தை நிறுத்தினார்.

இதனால் கமலிக்கும் 2 வது திருமணம் செய்யவிருந்த இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து  தகவலறிந்து  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மேலும் இது தொடர்பாக கமலி புகார் அளித்தநிலையில் போலீசார் ராமச்சந்திரன் மற்றும் இளம்பெண்ணின் குடும்பத்தாரை விசாரணைக்காக அழைத்துள்ளனர். இந்நிலையில்  ராமச்சந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.