படுக்கையறையில் 6 பேருடன் சேர்ந்து மனைவி செய்த செயல்!. கள்ளக்காதலின் உச்சம்!.

படுக்கையறையில் 6 பேருடன் சேர்ந்து மனைவி செய்த செயல்!. கள்ளக்காதலின் உச்சம்!.



wife killed his husband for illegal affair


வேலூர் மாவட்டத்தில்அக்பர் என்பவர் மாடு வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி ரியானா என்ற மனைவியும், 3 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் அவர் அண்மையில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்பரின் மனைவி ரியானா அவரது கள்ளக்காதலன் காலித் அகமது என்பவருடன் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு பின்னர் உடலை சாலை ஓரமாக வீசிச்சென்றது தெரியவந்துள்ளது..

ரியானாவிற்கும் அவரது பள்ளி தோழரான காலித் அகமதுவுக்கும்  இடையே இருந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது . இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்பருக்கு தெரியவந்ததை அடுத்து ரியான மற்றும் காலீத்தை கண்டித்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த காலீத் அவனது நபர் சதீஷ் என்பவருடன் சேர்ந்து அக்பரை கொலை செய்ய  திட்டமிட்டு, இதற்காக ரூ.6 லட்சம் செலவுசெய்து கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளனர். ரியானாவின் வீட்டிற்கு கூலிப்படையுடன் சென்ற காலீத் அகமது, படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த அக்பர் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியுள்ளனர் .

 கணவனை கொலை செய்வதற்கு, மனைவி ரியானா உதவி செய்துள்ளார். அக்பர் இறந்தவுடன் அவரது சடலத்தை நெடுஞ்சாலை ஓரமாக வீசிவிட்டு விபத்தில் இறந்தது போல ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அக்பரின் மனைவி ரியானா மற்றும் விவேக், சதீஷ், லோகநாதன், கிருபாகரன் ஆகியோரை வாலாஜாப்பேட்டை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.