என்னங்க, வயித்துல இருந்த குழந்தையை காணும்! கணவனை திக்குமுக்காட வைத்த மனைவி, அம்பலமான ரகசியம்!
என்னங்க, வயித்துல இருந்த குழந்தையை காணும்! கணவனை திக்குமுக்காட வைத்த மனைவி, அம்பலமான ரகசியம்!
சென்னை சூளை பகுதியில் வசித்து வந்தவர் மெக்கானிக் சுதாகர். இவர் தனது தமது அக்கா மகளை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் வயிற்றில் தலையணையை வைத்துக்கொண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது குடும்பத்தினரை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது கணவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த தனது மனைவியைக் காணவில்லை என சுதாகர் போலீசில் புகாரளித்தார். மேலும் போலீசாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கணவரைத் தொடர்புகொண்ட அந்த பெண், தன்னை யாரோ கடத்திவிட்டனர், மேலும் தனக்கு பிறந்த குழந்தையையும் அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது,அந்த பெண் தனியாகவே வேகவேகமாக நடந்து சென்றது
தெரியவந்தது.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், குழந்தை இல்லாததால் கணவர் தம்மைப் பிரிந்து விடுவாரோ என்ற அச்சத்தில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
பின்னர் அவருக்கு அறிவுரை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.