திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்.!

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்.!


when-thiraiyarankus-are-open-minister-kadampur-raj

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிக்கும் விதமாக திரையரங்குகள் மற்றும் பேருந்து போன்றவற்றை அரசு இன்று வரை திறக்க அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை வெளியிட்டது. அதனை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். ஆனால் அதற்கு எந்த ஒரு பதிலையும் அரசு தெரிவிக்கமாலும், திரையரங்கை திறக்க அனுமதி வழங்காமலும் இருந்து வந்தது.

Kadampur raj

தற்போது திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். கோவில்பட்டி அருகே கடம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜ் திரையரங்குகளை திறப்பது பற்றி எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறியுள்ளார். மேலும் கொரோனாவின் தாக்கம் குறைவதை பொருத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.