சதுரகிரி பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி: 4 நாட்கள் மலையேற தடை அறிவிப்பு.!



Virudhunagar Sundhara Mahalingam Temple Hills Travel banned 4 Days 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சுந்தரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வருவது வழக்கமான ஒன்று. 

மலைமீதுள்ள கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், அவ்வப்போது சூழ்நிலைக்கேற்ப பக்தர்களின் பயணத்திற்கு தடை விதிக்கப்படும். 

தற்போது மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி காரணமாக வரும் நான்கு நாட்களுக்கு அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல, சுந்தரமகாலிங்கம் வனப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இந்நிலையில், டிசம்பர் 24ம் தேதியான நாளை முதல், 4  நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு மலையேறி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் தாணிப்பாறை அடிவார பகுதிகளுக்கும் வரவேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.