ஓடும் இரயில் ஏற முயற்சித்து சோகம்; தலைநசுங்கி 35 வயது நபர் பரிதாப பலி.!
ஓடும் இரயில் ஏற முயற்சித்து சோகம்; தலைநசுங்கி 35 வயது நபர் பரிதாப பலி.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் இரயில் நிலையத்திற்கு, நேற்று காலை சுமார் 09:30 மணியளவில் நபர் ஒருவர் வந்தார். அவர் தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா இரயில் பயணம் செய்ய முற்பட்டார்.
இரயில் மூன்றாவது நடைமேடைக்கு வந்த நிலையில், கோவில்பட்டியை நோக்கி பயணிகளை இறக்கவிட்டபின் மீண்டும் பயணத்திற்கு தயாராகியுள்ளது.
அச்சமயம் ரயில் பயணத்திற்கு வந்த 35 வயது நபர், இரயிலில் ஏற முற்பட்டு தவறி நடைமேடையில் விழுந்தார். இரயில் நகர்ந்துகொண்டு இருந்ததால், தண்டவாளத்தில் தலை சிக்கி, சக்கரம் ஏறி இறங்கியது.
இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே அவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இரயில் அங்கேயே நிறுத்தப்பட்ட நிலையில், இரயில்வே காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் சுமார் 35 நிமிடங்கள் தாமதமாக இரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.