கொரோனா அச்சத்தில் வயதான தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு..

கொரோனா அச்சத்தில் வயதான தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு..



virudhunagar-old-age-couple-committed-suicide-in-sivaka

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகையுள்ள ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த வயதான தம்பதி பெருமாள் - தெய்வானை. இவர்கள் இருவரும் தனது மகன் முத்துமணியின் ஆதரவில் வாழ்ந்து வந்துள்ளனர். 62 வயதான தெய்வானை ஏற்கனவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் கொரோனா பரவலின் அச்சம் ஏற்ப்பட்டுள்ளது. கொரோனா வந்தால் இருவரும் பிழைக்க மாட்டோம் என்று மகன் முத்துமணியிடம் கூறி புலம்பி வந்துள்ளனர். முத்துமணியும் அவர்களுக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.

corona

இருப்பினும் அச்சத்தில் இருந்த பெருமாள் மற்றும் தெய்வானை வெளியூரில் இருக்கும் தனது மகள்களை அழைத்து வருமாறு தனது மகனிடம் கூறியுள்ளனர். வீட்டிற்கு வந்த மகள்கள் தனது பெற்றோரிடம் மருத்துவமனை சென்று வந்தால் எல்லாம் சரியாகி விடும் என கூறியுள்ளனர்.

அதற்கு அவர்கள் யாரிடம் அவ்வளவு பணம் இருக்கிறது என்று விரக்தியாக கூறியுள்ளனர். இந்நிலையில் மகள் சாந்தி வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது வயலில் தெளிக்கப்படும் பூச்சு மருந்தின் வாசனை வந்துள்ளது.

அதனையடுத்து மகள் ஓடி சென்று பெற்றோரின் அறையை பார்த்த போது இருவரும் மயங்கி கிடந்துள்ளனர். இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இருவரும் சிகிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.