தமிழகத்தை அதிரவைத்த 15 வயது சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கு; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

தமிழகத்தை அதிரவைத்த 15 வயது சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கு; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!



Viluppuram Sirumadurai village Child Murder Case Judgement 

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ (வயது 15). இந்த சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான முருகன் மற்றும் யாசகம் ஆகியோர் சேர்ந்து எரித்து கொலை செய்தனர். 

விசாரணையில், ஒரே சமூகத்தை சேர்ந்த ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கும் - முருகன் தரப்புக்கும் இடையே நடந்த பிரச்சனையில், சிறுமி ஜெயஸ்ரீ திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதனையடுத்து, இவ்வழக்கில் அதிமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இவ்வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் முருகன் மற்றும் யாசகத்திற்கு ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தனர்.