கரும்பு ஏற்றிவந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி அரசு மருத்துவமனை செவிலியர் பலி : நெஞ்சை உலுக்கும் சோகம்.!

கரும்பு ஏற்றிவந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி அரசு மருத்துவமனை செவிலியர் பலி : நெஞ்சை உலுக்கும் சோகம்.!



Viluppuram Mailam Sugarcane Tractor Kills Govt Hospital Nurse Life

பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அரசு மருத்துவமனை செவிலியர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பொம்பூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் பெண்மணி சிவப்பிரியா (வயது 30). இவர் தினமும் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்து செல்வது வழக்கம். 

இந்த நிலையில், நேற்று இவர் வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்த சமயத்தில், கூனிச்சம்பட்டு பகுதியில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் லாரி சிவப்பிரியாவின் இருசக்கர வாகனத்தில் மோதி உள்ளது. 

Viluppuram

இந்த சம்பவத்தில் நிலைதடுமாறி விழுந்த சிவப்பிரியா, டிராக்டர் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் சிவப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.