கரும்பு தோட்டத்தில் துர்நாற்றம்.. அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு.. விசாரணையில் அதிர்ச்சி.!

கரும்பு தோட்டத்தில் துர்நாற்றம்.. அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு.. விசாரணையில் அதிர்ச்சி.!



Viluppuram Kandamangalam Missing 55 Aged Woman Body Discovered Sugarcane Farming Area

கருவாடு விற்பனை செய்ய சென்ற 55 வயது பெண்மணி, கரும்பு தோட்டத்தில் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம், துலுக்காநத்தம் மாரியம்மன் கோவிலை சேர்ந்தவர் அய்யாவு (வயது 63). இவரின் மனைவி முத்தம்மாள் (வயது 55). இவர் கருவாடு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 11 ஆம் தேதியன்று கருவாடு விற்பனை செய்ய முத்தம்மாள் வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை என்பதால், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் முத்தம்மாளின் மகன் ராஜீவ்காந்தி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முத்தம்மாளை தேடி வந்துள்ளனர். 

இந்த நிலையில், இன்று காலை நேரத்தில் கண்டமங்கலம் அருகேயுள்ள முத்தாலம்மன்கோவில் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் துர்நாற்றம் வந்துள்ளது. இதனைகவனித்த அப்பகுதி மக்கள் சென்று பார்க்கையில், அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்துள்ளது. பின்னர், இதுகுறித்து கண்டமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Viluppuram

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் மாயமான முத்தம்மாள் என்பது உறுதியானது. முத்தம்மாள் கருவாடு விற்பனை செய்ய செல்லும் போது கம்மல், தங்க சங்கிலி, மோதிரம், மூக்குத்தி போன்ற தங்க நகைகளை அணிந்து சென்றுள்ளார். 

அவரின் நகைக்கு ஆசைப்பட்ட மர்ம நபர்கள் நகைக்காக முத்தம்மாளை கொலை செய்து உடலை கரும்பு தோட்டத்தில் வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.