இனி இதை செய்தால் சஸ்பெண்ட் கிடையாது.. நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவீர்.! போக்குவரத்துறை எச்சரிக்கை.!

இனி இதை செய்தால் சஸ்பெண்ட் கிடையாது.. நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவீர்.! போக்குவரத்துறை எச்சரிக்கை.!



villupuram-driver-conductor-arrested

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த  பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கண்டக்டர் கைது செய்யப்பட்டனர். மேலும், உடனடியாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.  

விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, ஓடும் பேருந்தில் நடத்துனர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தநிலையில் பேருந்து நடத்துனரான சிலம்பரன் கைது செய்யப்பட்டார். 

மேலும், நடத்துனருக்கு உடந்தையாக செயல்பட்டதாக, ஓட்டுநர் அன்பு செல்வனையும் போலீசார் கைது செய்தனர். ​தொடர்ந்து இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தநிலையில்,  இது தொடர்பாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த  விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் சிலம்பரசன், உடந்தையாக இருந்ததாக ஓட்டுனர் அன்புச்செல்வன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் போக்குவரத்து கழகத்திற்கு தலைகுனிவையும், களங்கத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு ஆகும். இதுபோன்ற நிகழ்வுகளை வரும் காலங்களில் போக்குவரத்து கழக பணியாளர்கள் அனுமதிக்கக்கூடாது, மீறி ஈடுபடும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.