50 சவரன் பவுன்..‌ 20 ஆயிரம் ரொக்கம்... பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் கைவரிசையை காண்பித்த பெண் கைது...

50 சவரன் பவுன்..‌ 20 ஆயிரம் ரொக்கம்... பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் கைவரிசையை காண்பித்த பெண் கைது...



Villivakkam near one women arrest by snacking

வில்லிவாக்கம் வடக்கு திருமலை நகரை சேர்ந்தவர் பிரியபிரசாத். இவர் அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரியபிரசாத் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட செங்குன்றம் பகுதியை சேர்ந்த கோகிலா, அவரது நண்பர் சரவணன் என்பவருடன் சேர்ந்து கொண்டு வீட்டை உடைத்து பிரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளனர்.

robbery

இதுகுறித்து ஐ.சி.எப். போலீசார் சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளியான கோகிலாவை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 20 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவான சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்