காதல் என்று ஆசை வார்த்தைகள் கூறி.. சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... இளைஞர் கைது.!

காதல் என்று ஆசை வார்த்தைகள் கூறி.. சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... இளைஞர் கைது.!



vello-district-police-arrested-a-a-youth-for-sexually-a

வேலூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே முகமது புறம் என்ற ஊரில் பள்ளி மாணவியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது தொடர்பாக அந்தச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

tamilnadu

சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருக்கிறார். இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் அளித்த புகாரின் பேரில்  அவரது பெற்றோர் இளைஞரின் மீது  காவல் நிலையத்தில் குற்றம் சுமத்தினர்.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர்  குறித்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.