சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.. 5 பேருக்கு நேர்ந்த சோகம்..!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.. 5 பேருக்கு நேர்ந்த சோகம்..!



van-accident-by-break-cut-in-ooty

சுற்றுலா சென்ற வேனின் பிரேக் பழுதானதால் வேன் கவிழுந்து 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியிலிருந்து நந்தகோபால் என்பவர் ஊட்டிக்கு தனது 12 உறவினர்களுடன் சுற்றுலா வந்துள்ளார். அப்போது வேனை தங்கவேல் மணி என்பவர் ஒட்டிய நிலையில், இரண்டு நாட்கள் ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு கோத்தகிரி வழியாக கோவை புறப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வேன் கோத்தகிரி பகுதியில் வந்தபோது பிரேக் பழுதாகிய நிலையில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியுள்ளது. மேலும், 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக இருந்த வேனை, டிரைவர் சாதுரியமாக வலதுபுற சாலையோர தடுப்பில் மோதி நிறுத்தியுள்ளார்.Ootyஇருப்பினும் பள்ளத்தில் கவிழாமல், ரோட்டில் கவிழ்ந்து வேன் விபத்துக்குள்ளானது. ஆனால், டிரைவரின் சாதுரியத்தின் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், வேனில் பயணித்த சிரியா, ஸ்ரேயா சினானி, சரிதா, ரிஷி, லஷ்மி ராமன் ஆகிய 5 நபருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்த கோத்தகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.