#BigBreaking: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பயங்கர விபத்து.. 25 பேர் உடல் நசுங்கி பலி., அதிகாலையில் அதிரவைக்கும் சோகம்.! 

#BigBreaking: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பயங்கர விபத்து.. 25 பேர் உடல் நசுங்கி பலி., அதிகாலையில் அதிரவைக்கும் சோகம்.! 


Uttarakhand Bus Accident 25 Died 21 Injured

 

மலைப்பாங்கான பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பயணிகள் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள துமாகோட் மாவட்டம், பிரோகால் பகுதியில் 50 Kkum மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து மலைப்பகுதியில் சென்று கொண்டு இருந்தது. 

இந்த பேருந்து பவுரி கர்வால் என்ற இடத்திற்கு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

Uttarakhand

மேலும், 21 பேர் படுகாயத்துடன் உயிருக்கு அலறித்துடித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மீட்பு படையினர் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி வருகின்றனர். 

உயிரிழந்தவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது.