சசிகலா வெளியே வந்தவுடன் எடப்பாடிக்கு காத்திருக்கும் ஆப்பு.! ஓப்பனாக பேசிய உதயநிதி ஸ்டாலின்.!
சசிகலா வெளியே வந்தவுடன் எடப்பாடிக்கு காத்திருக்கும் ஆப்பு.! ஓப்பனாக பேசிய உதயநிதி ஸ்டாலின்.!
"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சார பயணத்திற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிதம்பரத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நான் திருவாரூரில் தான் பிரச்சாரத்தை தொடங்கினேன். திருக்குவளையில் கலைஞர் பிறந்த இல்லத்தின் வாசலில் கைது செய்யப்பட்டேன். எடப்பாடி அரசு எனக்கு எத்தனை பெரிய விளம்பரத்தைத் தேடித் தந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் காணப்பட்ட எழுச்சி மீண்டும் மக்களிடையே காணப்படுவதால் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்டது.
ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இதுவரை அ.தி.மு.க.வினருக்கே தெரியவில்லை. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் ஓ.பி.எஸ். ஆனால் ஜெயலலிதா இறப்பு குறித்து நடத்திய விசாரணைக்கு ஆஜராக அழைத்த போதும் அவர் ஆஜராகவில்லை. சசிகலா விடுதலை ஆகி வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு அடிப்பார். நீங்கள் தேர்தலில் அவருக்கு ஆப்பு அடிக்க வேண்டும். தற்போது உள்ள அதிமுக ஜெயலலிதா, சசிகலா என இரண்டு பேருக்குமே உண்மையாக இல்லை.
அதிமுகவின் அனைத்து மட்டத்திலும் ஊழல் மலிந்து விட்டது. முதல்வர் எடப்பாடியின் சம்பந்திதான் அனைத்து கான்டிராக்டுகளையும் எடுக்கிறார். சேலம் எட்டு வழி சாலையில் திட்டத்தில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது. நம்மை விட மோசமானவன் என நினைத்து கொரோனாவே இந்த ஆட்சியைப் பார்த்து பயந்து ஓடும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.