கொளுத்திப்போட்ட உதயநிதி.. அதிமுக சர்ச்சையில் தலையைவிட்டு தரமான சம்பவம்.. தடாலடி பேச்சு.!
கொளுத்திப்போட்ட உதயநிதி.. அதிமுக சர்ச்சையில் தலையைவிட்டு தரமான சம்பவம்.. தடாலடி பேச்சு.!

அதிமுகவினர் அவர்களே விமர்சனம் செய்துகொள்வார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற திமுக ஓராண்டு சாதனை விளக்கக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் திருவெல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "மூன்று மாதத்தில் கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, வேலூர் உட்பட 6 மாவட்டத்திற்கு பொற்கிழி வழங்கப்படவுள்ளது. மக்கள் என்னிடம் கொடுத்த மனுவை முதல்வரிடம் வாங்கியிருக்கிறேன் உரிய தீர்வு மக்களுக்கு கிடைக்கும். அதிமுகவினரை நாம் விமர்சனம் செய்ய வேண்டும். அவர்களே விமர்சனம் செய்து கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.