2 வது திருமணம் செய்த இளம் பெண்!,. பெற்றோர் செய்த காரியத்தால் பரிதாப பலி: பரிதவிக்கும் காதல் கணவன்..!

2 வது திருமணம் செய்த இளம் பெண்!,. பெற்றோர் செய்த காரியத்தால் பரிதாப பலி: பரிதவிக்கும் காதல் கணவன்..!



tried to commit suicide by consuming rat poison because parents did not talk

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள கும்முடிமூலை கிராமத்தை சேர்ந்தவர் இந்து (28). இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனை தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அதே நிறுவனத்தில் பணிபுரிந்த கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள கொளப்பலூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து, இருவரும் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்தில் இந்துவின் பெற்றோருக்கு சம்மதம் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர்கள் இந்துவுடன் பேசாமல் இருந்து வந்துள்ளனர். பெற்றோரின் இந்த செயலால் இந்து மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று பிரபாகரன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்குதிரும்பி வந்துள்ளார். அப்போது, இந்து திடீரென வாந்தி எடுத்ததால் அவரிடம் விசாரித்துள்ளார். பெற்றோர்கள் தன்னிடம் பேசாததால் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக இந்து தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரபாகரன், அவரை கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் இந்து அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி  இந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து சிறுவல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.