சுஜித்தை மீட்க இரண்டு வழிகளில் தீவிர முயற்சி! 8 மணி நேர போராட்டத்திற்கு வெற்றி கிடைக்குமா?

சுஜித்தை மீட்க இரண்டு வழிகளில் தீவிர முயற்சி! 8 மணி நேர போராட்டத்திற்கு வெற்றி கிடைக்குமா?


Trichu bore well baby Sujith saving moments

திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இதனை அடுத்து கடந்த 8 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் தீவிரகமாக நடைபெற்றுவருகிறது.

மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மீட்பு கருவி மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றுகிறது. ஒருகையில் சுருக்கு போடப்பட்டுள்ள நிலையில், மறுகையில் சுருக்கு போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரமாக முயற்சித்தும் சுருக்கு போடும் முயற்சி தோல்வி அடைந்துவருவதால் மறுபுறம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.

SaveSujith

5 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஒருபுறம் பள்ளம் தோண்டப்படும் நிலையில் மறுபுறம் மீண்டும் குழந்தையின் கையில் சுருக்கு போட முயற்சித்துவருகின்றனர். கடந்த 8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த போராட்டத்தில் இதுவரை எனத ஒரு முன்னேற்றமும் இல்லை.