இரவு நேர ஊரடங்கு.! சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து.! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

இரவு நேர ஊரடங்கு.! சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து.! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!



train stopped for night curfew

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. 

இந்தநிலையில் இரவு நேர ஊரடங்கு காரணமாக சென்னையில் மின்சார ரயில் சேவை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நிறுத்தப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியான அறிவிப்பில், சென்னையில் இரவு நேர ஊரடங்கு காரணமாக, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. 

Night curfewஇந்த நடைமுறை நாளை(22/04/2021) முதல் அமலுக்கு வருகிறது. அதே போல முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக் கிழமைகளில் நான்கில் ஒரு பங்கு அளவு மட்டுமே மின்சார ரயில்சேவை இருக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.