2 மணி நேர போராட்டம்.. நட்சத்திர ஹோட்டலில் பரிதாபம்...லிப்டில் சிக்கி உடல் நசுங்கி பலியான ஊழியர்.!

2 மணி நேர போராட்டம்.. நட்சத்திர ஹோட்டலில் பரிதாபம்...லிப்டில் சிக்கி உடல் நசுங்கி பலியான ஊழியர்.!



tragedy-in-chennai-star-hotel-employee-trapped-in-lift

சென்னையில் இயங்கி வரும் பிரபல ஹோட்டல் இன் லிஃடில் சிக்கி உடல் நசுங்கி ஹோட்டல் பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இயங்கி வரும் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் பெரம்பூர் ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்ற 28 வயது இளைஞர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் தனது பணிக்கு சென்ற இவர் மதியம் 2:45  மணி அளவில் தனது பணிக்கான பொருட்களை எடுத்துக் கொண்டு எட்டாவது மாடியிலிருந்து பதினொன்றாவது தளத்திற்கு செல்ல லிஃப்டில் ஏறி இருக்கிறார்.

Tamilndu

நீண்ட நேரமாகியும் லிஃப்ட்  கதவு மூடப்படாததால் தலையை எட்டி  வெளியே பார்த்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் இயங்க தொடங்கி இருக்கிறது  இதனால் அவரது  உடலில் இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி லிப்ட்டுக்குள்ளேயும் ட இடுப்பிற்கு மேல் உள்ள பகுதி வெளியேயும் சிக்கியிருக்கிறது. இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த உடன் பணிபுரிபவர்கள் மின் தூக்கியை நிறுத்தி அபிஷேக்கை மீட்க போராடினர். அவர்களால் மீட்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் வந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி 
லிஃப்டில்  சிக்கியிருந்த அபிஷேக்கின் உடலை மீட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்து போன விஷயத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.