டூ-வீலரை பார்த்து மாடு மிரண்டதால் விபரீதம்: பரிதாபமாக பலியான பெண்..!

டூ-வீலரை பார்த்து மாடு மிரண்டதால் விபரீதம்: பரிதாபமாக பலியான பெண்..!



Tragedy after cow spooks two-wheeler: Woman tragically killed

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள பள்ளபட்டி தெற்கு தெரு பகுதியை  சேர்ந்தவர் சின்னத்தம்பி (55). விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி (50). சம்பவத்தன்று  இவர்கள் இருவரும் தங்கள் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வதற்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு இருசக்கர வாக்னத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சோழவந்தான் சாலையில் கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. மாட்டின் மீது மோதாமல் இருக்க சின்னத்தம்பி இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளா. அதற்குள் மிரண்டுபோன அந்த மாடு, இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதிவிட்டு ஓடியது. எதிர்பாராத இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார். சின்னத்தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விளாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.