நாளை TNPSC குரூப்-4 தேர்வு.! தேர்வுக்குப் போறவங்க கட்டாயம் இதை எல்லாம் மறந்துட்டு போயிடாதீங்க..!

நாளை TNPSC குரூப்-4 தேர்வு.! தேர்வுக்குப் போறவங்க கட்டாயம் இதை எல்லாம் மறந்துட்டு போயிடாதீங்க..!



tomorrow-group-4-exam

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு நாளை ஜூலை 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெறுகிறது. இதற்காக டி.என்.பி.எஸ்.சி. விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

இந்த தேர்வில் மொத்தம் 534 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணிகள் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வில், தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட வேண்டும். தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை கட்டாயம் கொண்டுவரவேண்டும். பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றின் நகல் எடுத்து வருவது கட்டாயம்.

9 மணிக்கு OMR தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படும். 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும், 12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது.

தேர்வர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், செல்போன்கள் மற்றும் இதர பொருட்களைத் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை . OMR தாளில் கருப்பு பால் பாய்ண்ட் பேனாவைத் தவிர பென்சில் அல்லது வேறு பேனாவில் எழுதக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OMR தாளில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும். OMR தாளில் ஒரு கட்டத்தைத் தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களைத் விடைகளாகக் குறிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.