மாணவியின் இறுதி சடங்கில் இவர்கள் பங்கேற்க தடை... போலீசார் அறிவுறுத்தல்...

மாணவியின் இறுதி சடங்கில் இவர்கள் பங்கேற்க தடை... போலீசார் அறிவுறுத்தல்...



Today Srimathi last funeral

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மனுதாக்கல் செய்தனர். இதனையடுத்து தொடர் போராட்டம் நடைபெற்ற நிலையில், 17ஆம் தேதி பெரும் வன்முறை வெடித்தது.

அந்த வன்முறையில் பள்ளியில் இருந்த பொருட்கள் அடித்துநொறுக்கப்பட்ட, பேருந்துகளுக்கு தீவைத்தனர். இது குறித்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், இன்று காலை 6 முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்று கொள்ள வேண்டும், இன்று மாலை 6 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என தெரிவித்தார். 

Kallakurichi

அதனையடுத்து கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், காவல்துறை தெரிவித்துள்ளது. வெளி ஆட்களோ, பிற அமைப்புகளோ இதில் பங்கேற்கக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஒலிபெருக்கி மூலமாக போலீசார் அறிவுறுத்தினர்.