மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?!

மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?!



Today is a holiday only for schools due to rain

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது. கடந்த 8 ஆம் தேதி சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று  முன்தினம் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் நடுவே மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னர் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவான அதே பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, மழை பெய்து வருவதால் காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாக்களில் செயல்பட்டுவரும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.