டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விசாரணையில் திடீர் திருப்பம்! விடைத்தாள் நிறம் மாறியது கண்டுபிடிப்பு!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விசாரணையில் திடீர் திருப்பம்! விடைத்தாள் நிறம் மாறியது கண்டுபிடிப்பு!



Tnpsc issue, paper colour changed


டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் முறைகேடு விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அழியும் மை பேனா கொண்டு நிரப்பப்பட்ட விடைத்தாள்கள் நிறம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2017-ம் ஆண்டு நடத்திய குரூப்- 2 ஏ தேர்வில் ராமேசுவரம் மையத்தில் எழுதிய 42 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு அதிக மதிப்பெண்கள் பெற்றதாக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

tnpsc

இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு குறித்த விசாரணையில் அழியும் மை கொண்ட போனாக்களால் நிரப்பப்பட்ட விடைத்தாள்களின் நிறம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிறம் மாறிய விடைத்தாள்களை டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் கவனிக்கத்தவறியது ஏன் என்றும் சிபசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல்  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில்  தலைமறைவாக உள்ள காவலர் சித்தாண்டி, மனைவி பிரியா ஆகிய இருவரின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்து உள்ளது.