பள்ளிக் கல்வித் துறையில் புதிய வேலைவாய்ப்பு; டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு

பள்ளிக் கல்வித் துறையில் புதிய வேலைவாய்ப்பு; டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு


tnpsc-exam-for-district-educational-officers

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தேர்வின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 18 காலியிடங்கள் நிரப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 58 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

tnpsc

கல்வித் தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டமும் B.T. or B.Ed.  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ. 150-ஐ பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் முதன்மை தேர்வு கட்டணமாக ரூ. 100-செலுத்த வேண்டும். பின்னர் முதன்மை தேர்வில் வெற்றிபெறுபவர்கள் மெயின் தேர்விற்கு தனியா ரூ. 100- செலுத்த வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 09. 2019. கட்டணம் செலுத்த கடைசி நாள் 11-01-2019. முதன்மை எழுத்து தேர்வு 02-03-2019 அன்று நடைபெறும். மெயின் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf 

தேர்வு செய்யும் முறை:

tnpsc
தேர்வு மையங்கள்:

tnpsc