அமைச்சர் இராமச்சந்திரனின் மகன் மீது 6 பேர் கும்பல் தாக்குதல்; அடாவடி கேடிகளுக்கு அதிகாரிகள் வலைவீச்சு.!

அமைச்சர் இராமச்சந்திரனின் மகன் மீது 6 பேர் கும்பல் தாக்குதல்; அடாவடி கேடிகளுக்கு அதிகாரிகள் வலைவீச்சு.!



TN Minister KKSSR Ramachandran Son Attacked By Gang 

 

தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரனின் மகன், பேரன் உட்பட குடும்பத்தினர், நேற்று சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தியேட்டருக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்க்க சென்றுள்ளனர். 

இரவு 10:50 மணியளவில் காட்சி திரையிடப்பட்ட நிலையில், படத்தின்போது இவர்களுக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த 3 ஆண்கள், 3 பெண்கள் குழு, படத்தை விசில் அடித்து கூச்சலிட்டுக்கொண்டு படம் பார்த்துள்ளது. மேலும், அமைச்சரின் குடும்பத்தினரை யார் என தெரியாமல் இடையூறு செய்ததாக தெரியவருகிறது. 

அவர்களிடம் அமைதியாக படத்தை பார்க்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. அச்சமயம் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழவே, அமைச்சரின் மகன் ரமேஷ், பேரன் கதிர் மீது கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்த தாக்குதலில் கதிருக்கு இரத்தக்காயம் ஏற்படவே, திரையரங்கு நிர்வாகத்தினர் இருதரப்பையும் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர். இத்தருணத்தை பயன்படுத்திக்கொண்ட கும்பல், அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. காயமடைந்த கதிர் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியாகி, அதிகாலை 4 மணிக்கு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். 

இந்த விஷயம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.