மின்சாரம் தாக்கிய மகனை காப்பாற்றச்சென்று தந்தை பலியான பரிதாபம்; வந்தவாசியில் சோகம்.!

மின்சாரம் தாக்கிய மகனை காப்பாற்றச்சென்று தந்தை பலியான பரிதாபம்; வந்தவாசியில் சோகம்.!



tiruvannamalai vandavasi father died when Son life save by him 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் வசித்து வருபவர் இப்ராஹிம் ஷா. இவரின் மகன் அன்சாரி. 

இன்று காலை அன்சாரி தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. 

எதற்ச்சையாக மாடிக்கு சென்ற இப்ராஹிம் மகன் மின்சாரம் தாக்கி துடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அவரை காப்பாற்ற நினைத்து மகனை தள்ளிவிட்டுள்ளார். 

இதனால் இப்ராஹிம் மின்சார கம்பிகளின் மீது விழுந்து மின்தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்த விபத்தில் மகனை காப்பாற்ற சென்ற தந்தை பரிதாபமாக பலியாகினர். 

அன்சாரி மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.