#Video: ஆற்றின் வேகத்தை அசால்ட்டாக நினைத்து இருசக்கர வாகனத்தை பறிகொடுத்த இளைஞர்..! ஒவ்வொருவருக்கும் பாடம்.!!

#Video: ஆற்றின் வேகத்தை அசால்ட்டாக நினைத்து இருசக்கர வாகனத்தை பறிகொடுத்த இளைஞர்..! ஒவ்வொருவருக்கும் பாடம்.!!


Tiruvannamalai Sathanur Man Bike Washout River Flood

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை தொடர் கனமழை காரணமாக நிரம்பியுள்ளது. இதனால் அணை எப்போது வேண்டுமென்றாலும் திறக்கப்படலாம் என்று அஞ்சப்படும் நிலையில், சாத்தனூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், ஜவ்வாது மலையில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருகில் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ள நிலையில், ஆற்றின் ஆபத்தை உணராமல் இளைஞர் இருசக்கர வாகனம் இயக்கி வந்தார். அப்போது, அவரின் இருசக்கர வாகனம் ஆற்று நீர் வேகத்தில் அடித்து செல்லப்பட்டது. இளைஞர் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினார்.