படிப்பு வரவில்லை என சிறுமிக்கு தீக்குச்சியால் தீவைத்த தலைமை ஆசிரியை.. விசாரணையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.!

படிப்பு வரவில்லை என சிறுமிக்கு தீக்குச்சியால் தீவைத்த தலைமை ஆசிரியை.. விசாரணையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.!



Tiruvannamalai Govt School Teacher Set Litreal Fire on Child Student

சரியாக படிக்காத மாணவியின் முகத்தில் ஆசிரியை தீக்குச்சியால் சூடுவைத்த பயங்கரம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் பகுதியை சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வருகிறார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக உஷாராணி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று உஷாராணி சிறுமி சரிவர படிக்கவில்லை என்று கூறி, உஷாராணி தீக்குச்சியை எரியவிட்டு சூடு வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். 

வீட்டில் பெற்றோரிடம் நடந்ததை கூறவே, அதிர்ச்சியடைந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக தலைமை ஆசிரியை உஷாராணியை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்தனர். 

அங்கு விசாரணைக்கு வந்திருந்த தலைமை ஆசிரியை உஷாராணி திடீரென மயங்கியதால், சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.