தமிழகமே அதிர்ச்சி..! யூடியூப் பிரபலம் ஆசைகாட்டி 7 பேர் கும்பலால் சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; அரசியல்கட்சி பிரமுகர் மகனின் அதிர்ச்சி செயல்.!
தமிழகமே அதிர்ச்சி..! யூடியூப் பிரபலம் ஆசைகாட்டி 7 பேர் கும்பலால் சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; அரசியல்கட்சி பிரமுகர் மகனின் அதிர்ச்சி செயல்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில், வீரகுமாரசாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 3 நாட்கள் தேர் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இசைக்கச்சேரி உட்பட பல நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இவற்றை பார்க்க அப்பகுதியை சேர்ந்த 17 வயது பாலிடெக்னீக் கல்லூரி மாணவி, தனது தாயுடன் வருகை தந்துள்ளார்.
அவர் கூட்டத்தில் இருந்து திடீரென மாயமாக, மாணவியின் தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, கடந்த மார்ச் 11ம் தேதி மாணவி அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அவரிடம் தாய் விசாரித்தபோது, தன்னை பலர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்ததாக தெரிவித்து இருக்கிறார்.
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன தாய் காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நடந்த விசாரணையில் இசைக்கச்சேரிக்கு வந்த பிரபாகரன் (வயது 32), நண்பர் மணிகண்டன் (வயது 29) ஆகியோர் சேர்ந்து மாணவியை யூடியூபில் பிரபலமாக்குவதாக கூறி இருக்கின்றனர்.
ஒருகட்டத்தில் மாணவியிடம் சமூக வலைத்தளங்கள் குறித்து பேசியவர்கள், தங்களின் வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். காட்டுப்பகுதியில் சிறுமி இருவர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்தும் பலனில்லை.
பின் திரும்பி வரும் வழியில் சிறுமியை தினேஷ் (வயது 27), பாலா சுப்பிரமணி (வயது 30), நவீன் குமார் (வயது 26), நந்தகுமார் (வயது 30), சதீஷ் (வயது 28) ஆகியோர் வழிமறித்து கடத்தி சென்று காரில் வைத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்பது தெரியவந்ததது.
இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முதற்கட்டமாக மணிகண்டன் மற்றும் பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர். அதனைதொடர்ந்த்து, பிற ஐவர் கும்பலும் கைது செய்யப்பட்டது. இவர்களில் தினேஷின் தந்தை கதிர்வேலசாமி அதிமுக கிளை செயலாளர் ஆவார்.