பேஸ்புக்கில் காதல்.. சிறுமியை கடத்தி கற்பழித்த காதலன்.. திருப்பத்தூரில் பரபரப்பு சம்பவம்.!

பேஸ்புக்கில் காதல்.. சிறுமியை கடத்தி கற்பழித்த காதலன்.. திருப்பத்தூரில் பரபரப்பு சம்பவம்.!



Tirupattur Vaniyambadi Minor Girl Rapped by Trap of Love Police Arrest Youngster

17 வயது சிறுமியை காதலிப்பதாக நடித்து, திருமண ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த காதலன் போக்ஸோவில் கைது செய்யப்பட்டான்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, புதூர் கிராமத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் 3 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர்கள் மகளை காணவில்லை என வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

பெற்றோர்களின் புகாரை ஏற்றுக்கொண்ட வாணியம்பாடி காவல் துறையினர் மாணவியை தேடி வந்துள்ளனர். விசாரணையில், மாதனூர் பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ருத்ரகுமார் (வயது 23) என்பவர், சிறுமியுடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது. 

Tirupattur

இவர்கள் இருவரும் முகநூல் வாயிலாக பழகி வந்த நிலையில், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி ருத்ரகுமார் கடத்தி சென்றதும் அம்பலமானது. இதனையடுத்து, தனிப்படை காவல் துறையினர் ஆம்பூரை அடுத்துள்ள வெங்கடேசமுத்திரம் கிராமத்தில் இருந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

ருத்ரகுமாரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் அம்பலமாகவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் ருத்ர குமாரை சிறையில் அடைத்தனர்.