காத்துக்கருப்பு கலைக்கு என்ன ஆனது?.. கண்ணீர் மல்க வெளியிட்ட உருக்கமான வீடியோ.. கதறலோ கதறல்.!

காத்துக்கருப்பு கலைக்கு என்ன ஆனது?.. கண்ணீர் மல்க வெளியிட்ட உருக்கமான வீடியோ.. கதறலோ கதறல்.!


Tic Tok Famous KathuKarupu Kalai

டிக் டாக் புகழ் காத்துக்கருப்புகலை வெளியிட்டுள்ள வீடியோவில், "எனது அப்பா இறந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கு அப்பாதான் எல்லாமே. அவர் இறந்துவிட்டார். இன்று ஒரு இலட்சம் பணம் கொடுத்தாலும் அவர் திரும்பி வரமாட்டார். நான் யாரையும் கஷ்டப்படுத்தினால் மன்னித்துவிடுங்கள். 

இவ்வுளவு பெரிய தமிழகத்தில் என்னை பிடித்தது என்று 10 பேர் கூறமாட்டார்களா? எனக்கு என் ரசிகர்கள் 10 பேர் இருந்தாலும் போதும். அம்மாவுக்கு தொண்டையில் தைராய்டு பிரச்சனை என்று கூறுகிறார்கள். இனியும் நாம் சுற்றினால் சரிவராது. இனி வேலைக்கு சென்றாக வேண்டும். 

எனக்கும் பணம் வேண்டும். எனது அம்மாவுக்கு தொண்டையில் அறுவைசிகிச்சை செய்ய பணம் வேண்டும். நான் பல விடியோக்கள் பதிவு செய்துள்ளேன். இந்த வீடியோ மூலமாக உங்களின் மனது புண்பட்டு இருந்தால் மன்னித்துவிடுங்கள். உங்களின் பிச்சையால் நான் வாழ்கிறேன். 

உங்களுக்கான வீடியோ பதிவிடுவதால் குறைந்த வருமானம் வருகிறது. அதனை வைத்து பிழைப்பு ஓடுகிறது. முன்பு நான் கெட்டவனாக இருந்தேன்; பலரும் என்னை பார்த்தார்கள். இன்று நான் திருந்திவிட்டேன். என்னை பலரும் பார்ப்பது இல்லை. நான் திருந்தி நல்லவனாக வாழ்ந்து கஷ்டத்தை கூறுகிறேன். இதுதான் வாழ்க்கை.

நான் பல பெண்களை காதலிக்கிறேன் என்று கூறி வீடியோ பதிவிட்டேன். அதனை பார்த்தார்கள். இன்று நான் திருந்தி வாழ்கிறேன். என்னை யாரும் பார்ப்பது இல்லை. மனிதன் திருந்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறன். இப்போது என்னை பார்ப்பார்களா? லைக் செய்வார்களா?. எனக்கு ஏதேனும் ஒன்று என்றால் ரசிகர்கள் வருவார்கள்" என்று கண்ணீர் மல்க பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்.