கோடையில் கொட்டி தீர்க்கும் மழை..! 13 மாவட்டங்களில் 3 நாட்கள் தொடர் மழை வாய்ப்பு...!!

கோடையில் கொட்டி தீர்க்கும் மழை..! 13 மாவட்டங்களில் 3 நாட்கள் தொடர் மழை வாய்ப்பு...!!



three-days-rain-in-tamilnadu

மிழகத்தின் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடங்கிய 13 மாவட்டங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:-

இன்று, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு மற்றும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், நீலகிரி, நாகப்பட்டினம், கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.